மார்ச் 29 முதல் விதிமுறைகளில் தளர்வு

மார்ச் 29 முதல் விதிமுறைகளில் தளர்வு

2 mins read
1f8c9092-6d05-47fa-9f34-0dbe1fd7f695
நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங். படம்: தொடர்பு தகவல் அமைச்சு -

பிர­த­மர் லீ சியன் லூங், கொவிட்-19 விதி முறைகளில் முக்கிய மாற்­றங்­களை அறி­வித்­துள்­ளார். அதன்­படி, மார்ச் 29 முதல், ஒன்­று­கூ­டும் குழு­வில் இடம்பெறுவோர் எண்­ணிக்கை 10 என இரட்­டிப்­பா­கிறது. மேலும், வெளிப்­பு­றங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மில்லை.

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் ஊழி­யர்­களில் 75 விழுக்­கா­டு­வரை வேலை­யி­டங்­க­ளுக்­குச் சென்று பணி­யாற்­ற­லாம். 1,000 பேருக்கு மேல் ஒன்­று­கூ­டும் பெரிய நிகழ்­வு­களில் இடத்தின் கொள்ளளவில் 75 விழுக்­காடுவரை பங்கேற்பாளர்கள் இடம்ெபறலாம்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்றுடன் வாழும் சூழலை நோக்­கிய உறு­தி­யான, அதே­நே­ரம் படிப்­ப­டி­யான முன்­னேற்­றத்­தின் ஒரு பகுதி இவை என்று நேற்று நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­றி­ய­போது பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

வெளிப்­புற தொற்­றுப் பர­வல் அபா­யம் கணி­ச­மா­கக் குறைந்து வரு­வ­தால் முகக்­ க­வ­சத்தை வெளியிடங்களில் அணி­வது என்­பது அவ­ர­வர் விருப்­பாக ஆக்­கப்­படும் என்று கூறிய திரு லீ, அதே­நே­ரம் உள்­புற இடங்­களில் முக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம் என்­பது தொட­ரும் என்­றார்.

"இந்த பெரிய நட­வ­டிக்­கைக்­குப் பின்­னர், நிலைமை சீரா­கும்வரை நாம் பொறுத்­தி­ருப்­போம். எல்­லாம் நல்­ல­ப­டி­யாக நடக்­கு­மா­னால், நாம் இன்­னும் சில தளர்­வு­களை மேற்­கொள்­வோம். இருப்­பி­னும் எந்­த­வொரு திருப்­பத்­தை­யும் சந்­திக்க நாம் மன­ரீ­தி­யில் தயா­ராக இருக்­க­வேண்­டும்," என்­றார் பிர­த­மர்.

கிரு­மிப் பர­வல் என்­பது தொடர்ந்து நடை­பெ­றக்­கூ­டி­யது என்­ப­தால் மற்­றொரு அலை வீசக்­கூ­டும் என்று கூறிய அவர், எனவே கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் திரும்­ப­லாம் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை என்­றார். கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சிங்­கப்­பூர் பெரும் திருப்பு­ மு­னையை எட்­டி­யி­ருப்­ப­தால் கட்­டுப்­பா­டு­ க­ளைத் தளர்த்­தக்­கூ­டிய நிலை தற்­போது ஏற்­பட்­டி­ருப்­ப­தாக திரு லீ விளக்­கி­னார்.

"சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் தகுதி­ யுள்­ளோ­ரில் கிட்­டத்­தட்ட 95 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

"அதே­போல மொத்த மக்­கள்­தொ­கை­யில் 71 விழுக்­காட்­டி­னர் பூஸ்­டர் என்­னும் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்," என்­றார் திரு லீ.

ஓமிக்­ரான் வகைக் கிரு­மி­யால் உரு வான அலை, உச்­சத்­திற்­குச் சென்று தற்­போது தணிந்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், பல­ரும் தொற்­றுக்கு ஆளாகி மீண்டு வந்­தி­ருப்­ப­தால் வலு­வான நோய் எதிர்ப்பு சக்தி கொண்­ட­தாக மக்­கள்­தொகை மாறி இருக்கிறது என்றார்.

10 பேர்வரை ஒன்றுகூட அனுமதி; 75% ஊழியர்கள் வேலையிடங்களுக்குத் திரும்பலாம்; வெளியிடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை

திருப்புமுனையை எட்டியிருப்பதால் விதிமுறைகளைத் தளர்த்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. நிலைமை சீராகும் வரை பொறுத்திருப்போம். எல்லாம் நல்லபடியாக நடக்குமானால், இன்னும் சில தளர்வுகளை மேற்கொள்வோம். ஆயினும் எந்தவொரு திருப்பத்தையும் சந்திக்க மனரீதியில் நாம் தயாராக இருக்க வேண்டும்.

பிரதமர் லீ சியன் லூங்