பிரதமர் லீ: நம் ஊழியர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நமது பொறுப்பு

இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு பாதுகாப்பு வேலை நிறுத்தம் அமலாக்கப்பட்டுள்ளது.


மனி­த­வள அமைச்­சும், வேலை இடப் பாது­காப்பு சுகா­தார மன்­றம், தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் ஆகிய அமைப்­பு­களும் தொழில்­துறைப் பங்­கா­ளி­களும் இந்த வேலை நிறுத்தத்தைக் கோரியுள்ளனர்.


இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 20 பேர் வேலையிடங்களில் விபத்துகளாலோ மற்ற காரணங்களினாலோ மரணம் அடைந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது மிதமிஞ்சிய அளவு என்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அல்ல என்றும் பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.


வேலை நிறுத்­தப்­படும் நேரத்­தில் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும் பாது­காப்பு நிர்­வாக முறை­களை வலியுறுத்தவும் ஊழியர்கள் எழுப்பும் பாதுகாப்பு அக்கறைகளை உடனே கவனிக்கவும் நிறு­வ­னங்­கள் ஈடுபடும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.


"இதைச் சரி செய்ய வேண்டும். முதலாளிகள், மேர்பார்வையாளர்கள், ஊழியர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் - வேலையிட பாதுகாப்பை முதன்மையாகக் கருதுங்கள். இது உயிர்கள் சம்மந்தப்பட்ட ஒன்று. உள்ளூர் அல்லது வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருப்பது நமது பொறுப்பு," என்றார் பிரதமர்.


"நமது ஊழியர்கள் அவர்களது குடும்பங்களிடம் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்ல அனைவருக்கும் வேலையிடம் பாதுகாப்பாக இருப்பதை நாம் உறுதி செய்வோம்."

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!