சிங்கப்பூர் குடிமக்கள் குடும்பங்கள் அனைத்தும் இப்போது $100 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டைப் பெறலாம்.
பிரதான குடியிருப்பு பகுதிகளில் செயல்படும் 16,000க்கும் மேற்பட்ட கடைகளிலும் அங்காடிக் கடைகளிலும் அந்தப் பற்றுச்சீட்டுகளைச் சிங்கப்பூரர்கள் பயன்படுத்தலாம்.
இதோடு, 2023 தொடக்கத்தில் மேலும் $200 பற்றுச்சீட்டையும் 2024ல் மற்றொரு $200 பற்றுச்சீட்டையும் சிங்கப்பூரர்கள் பெறலாம். அவற்றைப் பெரிய பேரங்காடிகளில் பயன்படுத்தலாம். இப்போது கொடுக்கப்படும் பற்றுச்சீட்டுகள் 1.22 மில்லியன் குடும்பங்களுக்கு நன்மை பயக்கும். அவற்றை நேற்று முதல் குடும்பத்தினர் மின்னிலக்க முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
டிசம்பர் 31ஆம் தேதி வரை அவற்றைப் பயன்படுத்த முடியும்.
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், தெம்பனிஸ் வெஸ்ட் சமூக மன்றத்தில் நேற்று புதிய பற்றுச்சீட்டு விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் ஐந்து மேயர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்னதாக சென்ற ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி 2021ஆம் ஆண்டுக்கான நகர மேம் பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட குடியிருப்பு வட்டார கடைக்காரர்களுக்கும் உணவங்காடி கடைக்காரர்களுக்கும் ஆதரவு அளிக்கவும் மக்களின் அன்றாட செலவில் ஒரு பகுதியை ஈடுகட்ட வும் பற்றுச்சீட்டு விநியோகத் திட்டம் அமலானது.
நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய திரு வோங், "இந்த ஆண்டு பற்றுச்சீட்டுத் திட்டம் பிற்பகுதியில்தான் தொடங்க இருந்தது. ஆனால் விலைவாசி உயர்வதைக் கருத்தில்கொண்டு முன்னதாகவே பற்றுச்சீட்டுகள் இப்போது விநியோகிக்கப்படுகின்றன," என்றார்.
உக்ரேன் போர் காரணமாகவும் கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட பொருள், சேவை விநி யோகக் கோளாறுகள் காரணமாக வும் உலகம் முழுவதுமே விலைவாசி கூடி வருவதை அமைச்சர் சுட்டினார்.
விலைவாசி கூடும் நேரத்தில் சிங்கப்பூரர்களுக்கு இந்தப் பற்றுச்சீட்டுகள் ஓரளவுக்குத்தான் ஆதரவு அளிக்கும் என்றாலும் அரசாங்கம் இதர பல வகைகளில் மக்களுக்கு உதவி வருவதைத் திரு வோங் எடுத்துக் கூறினார்.
சென்ற மாதம் சேவை, பராமரிப்புக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டன.
அடுத்ததாக ஜூலை, அக்டோபர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதங்களில் தள்ளுபடிகள் கிடைக்கும்.
கணக்கிட்டுப் பார்க்கையில் வீவக நாலறை வீடுகளில் வசிப்போர் நான்கு மாதம் பயனீட்டுக் கட்டணம் அளவுக்குத் தள்ளுபடிகளைப் பெறுவார்கள்.
2022 நிதி ஆண்டு முழுவதும் அவர்களுக்கு இரண்டரை மாத சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடி கிடைக்கும்.