வலுவான பிணைப்பைக் கொண்ட குடும்பங்கள் சமுதாயத்தின் ஆணிவேர் என்றும் குடும்பங்களுக்கு ஏற்ற நாடாக சிங்கப்பூர் திகழ அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரர்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடங்க உதவும் வகையில் திருமண பந்தத்தில் சேர்பவர்களுக்கும் பெற்றோருக்கும் சலுகைகள் வழங்கப்படும் என்றார் அவர். அதுமட்டுமல்லாது, சொந்த வீடு வாங்க
பெரும்பாலான மக்களுக்கு உதவும் வகையில் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று திரு லீ தெரிவித்தார்.
"சிங்கப்பூரில் உள்ள சிறாருக்கு வாழ்வில் நல்லதொரு தொடக்கத்தை ஏற்படுத்தித் தரும் வகையில் பாலர் கல்வியை நாங்கள் பெருமளவில் மேம்படுத்திஉள்ளோம். மூத்தோருக்கான ஆதரவையும் நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துவோம். இதன்மூலம் அவர்கள் சமுதாயத்தில் நல்லவிதமாக மூப்படையலாம்," என்றார் பிரதமர் லீ.
தேசிய குடும்ப வாரத்தை முன்னிட்டு நடத்தப்படும் இரண்டு நாள் கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பிரதமர் லீ உரையாற்றி னார்.
சன்டெக் சிங்கப்பூர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்துக்கு அனுமதி இலவசம். இந்த இரண்டு நாள் நிகழ்வு இன்றுடன் நிறைவடைகிறது.
இதில் சிறுவர்களுக்கான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, குடும்பம் தொடர்பான முக்கிய தகவல்
களைப் பெற்றோர் பெற கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வை ஆண்டு
தோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் மாதப் பள்ளி விடுமுறையின்போது தேசிய குடும்ப வாரக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் நிகழ்ச்சியில் இடம்பெறும்.
இவ்வாண்டு நடைபெறும் நிகழ்வுக்கு லாப நோக்கமற்ற அமைப்பான வாழ்வுக்காகக் குடும்பங்கள் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. சிங்கப்பூர் குடும்பங்களைக் கொண்டாடும் கருப்பொருளுடன் இவ்வாண்டின் நிகழ்வு நடத்தப்படுகிறது.
மீள்திறன்மிக்க தனிநபர்களை உருவாக்க குடும்பங்களின் பங்கு மிகவும் முக்கியம் என்று திரு லீ தமது உரையில் தெரிவித்தார்.
"ஒருவரின் குணம், பண்பு
நலன்கள், கொள்கைகள் ஆகியவற்றை அவரது குடும்பம் வடிவமைக்கிறது. சமுதாயத்தின் ஒரு பகுதி என்ற உணர்வை ஒருவருக்கு அவரது குடும்பம் ஏற்படுத்துகிறது," என்று பிரதமர் லீ கூறினார்.
ஒருவருக்கு உதவி தேவைப்
படும்போதெல்லாம் அவரது குடும்பம்தான் முதலில் ஆதரவுக்கரம் நீட்டுவதாகப் பிரதமர் லீ தெரிவித்தார்.
வலுவான குடும்பப் பிணைப்புள்ள சூழலில் வளர்பவர்கள் தங்களுக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ளும்போது அதே
பண்புநலன்களுக்கு முக்கியத்
துவம் கொடுக்கும் வாய்ப்பு
அதிகம் என்றார் அவர்.
இருப்பினும், மற்ற குடும்பங்
களைவிட ஒருசில குடும்பங்
களுக்குக் கூடுதல் உதவி தேவைப்படுவதாக திரு லீ கூறினார். இத்தகைய குடும்பங்
களுக்கு உதவி வழங்க
திருமணங்கள், குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் கூட்டணி இலக்கு கொண்டுள்ளது.
உதாரணத்துக்கு ஒற்றைப் பெற்றோர், சிறையில் அடைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.