பார்சிலோனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாகச் சென்ற பயணிக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது சிட்னியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 2ஆம் தேதி சிங்கப்பூர் வழியாக அவர் சிட்னி சென்று உள்ளார். மறுநாள் அவருக்கு குரங்கம்மை இருப்பது தெரியவந்தது.
இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கடந்த சனிக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
குரங்கம்மை ஒரு தொற்று நோயாகும். விலங்குகள் மூலம் இந்நோய் மனிதர்களுக்குப் பரவுகிறது. உலகம் முழுவரும் குரங்கம்மை அதிகரித்து வருவதால் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. இதுவரை சிங்கப்பூரில் யாரும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்படவில்லை.
குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்ட பயணி ஜூன் 1ஆம் தேதி பார்சிலோனாவிலிருந்து கிளம்பியிருக்கிறார்.
மறுநாள் ஜூன் 2ஆம் தேதி அவர் சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தார். அதே நாள் அன்று சிட்னிக்குப் புறப்படுவதற்கு முன்பு இடைவழிப் பயணிகள் தங்குமிடத்தில் அவர் தங்கியுள்ளார். ஆனால் விமான நிலையத்தின் மற்ற இடங் களுக்கு அவர் செல்லவில்லை என்று சுகாதார அமைச்சு தெரி வித்தது. அந்தப் பயணி சிங்கப்பூரில் நுழையவில்லை. சமூகத்தில் மற்றவர்களைத் தொடர்புகொள்ளவில்லை. இதனால் அவர் மூலம் சமூகத்தில் குரங்கம்மைத் தொற்று பரவும் அபாயம் தற்போது இல்ைல.
இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ள தாகவும் அவருடன் யார், யார் தொடர்பில் இருந்தார்கள் என்பதைக் கண்டறிவதற்காக இரண்டு விமானங்களில் நோய்த் தொற்று தடங்களைக் கண்டறியும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் என்று அமைச்சு சொன்னது.
"அவருக்கு நெருக்கமாக யாரும் இருந்ததாகத் தெரியவில்லை என் பதால் யாரையும் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. சுமார் 13 பேர் அவருடன் ஓரளவு நெருக்கமாக இருந்திருக்கலாம். அவர்கள் அனைவரும் தொலைபேசி வழி கண்காணிப்பின் கீழ் 21 நாட்கள் வைக்கப்பட்டுள்ளனர். தொலைபேசியில் அழைக்கப்பட்டு தினமும் அவர்களது உடல்நிைல குறித்து விசாரிக்கப்படும்.
"குரங்கம்மைத் தொற்றுக்கான அறிகுறிகள் அவர்களிடம் தென் பட்டால் மருத்துவரீதியில் மதிப்பிடப் பட்டு அவர்களது உடல் நலம் குறித்து மேலும் மதிப்பிடுவதற்காக தொற்று நோய்களுக்கான தேசிய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள்," என்று அமைச்சு மேலும் கூறியது.