அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அக்கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி யான சசிகலா புரட்சிப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் அதிமுகவின் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதற்கு ஒற்றைத் தலைமை கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சையில் பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது.
இதன் தொடர்பில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர் களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் வேளையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் தவம் கிடப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சசிகலாவின் சுற்றுப் பயண அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"இன்று பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு திருத்தணி வரை செல் கிறேன்," என்று சசிகலா தெரிவித்துள்ளார். வழியெங்கும் பொதுமக்களை சந்திப்பதாகவும் ஜெயலலிதா, அண்ணா, எம்ஜிஆர் சிலை களுக்கு மாலைகளை அணிவித்து மரியாதை செலுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
"தமிழ் மண்ணின் உரிமைகளை காத்திடவும் பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணி காத்திடும் வகையிலும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புரட்சிப் பயணத்தை தொடங்குகிறார்," என்று அவரது சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
"சசிகலா பயணம் செய்யும் இடங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தப் புரட்சி பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள் இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று சசிகலா கேட்டுக் கொண்டு உள்ளார்.
இதற்கிடையே அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக அறி வித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
இதன் தொடர்பில் காவல் உயர் அதிகாரியிடம் அவரது தரப்பினர் புகார் அளித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'வாட்ஸ்ஆப்' வழியாக கொலை மிரட்டல் விடுத்துள்ள நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நிலவரத்தில் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் இணையம் வழியாக தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்து உள்ளனர்.
இதனால் பொதுக்குழு திட்ட மிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒருங்கிணைப்பாளரின் கை யெழுத்து இல்லாமல் பொதுக் கூட்டத்தை நடத்த முடியாது என்று பன்னீர்செல்வம் தரப்பு கூறுகிறது.
இதனால் இதற்கு உரிய பதில் நடவடிக்கையை எடுக்க எடப்பாடி பழனிசாமி, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதன் முடிவில் பழனிசாமி தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.