புக்கிட் பாத்தோக் பகுதியில் வெவ்வேறு இடங்களில் ஒரு 84 வயது முதியவரும் அவரது 14 வயது பேத்தியும் மாண்ட நிலையில் காணப்பட்டனர்.
புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6ல் உள்ள ஒரு புளோக்கின் அடித்தளத்தில் சிறுமியின் உடல் காணப்பட்டது. இது குறித்து ஜூன் 23 அன்று மாலை 5.50 மணி அளவில் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
அந்தச் சிறுமியின் மரணத்தில் சூது இருப்பதாகச் சந்தேகிக்கப்படவில்லை. அதற்குச் சில நிமிடங்கள் கழித்து முதியவர் ஒருவர் மாண்ட நிலையில் கிடப்பது குறித்து காவல்துறைக்கு மற்றொரு தகவல் கிடைத்தது.
புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 31ல் ஒரு வீட்டில் முதியவரின் சடலம் காணப்பட்டது. முதியவரின் நெஞ்சில் காயங்கள் இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சிறுமியின் சடலம் காணப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் முதியவரின் சடலம் கிடந்தது. சிறுமி, முதியவரின் பேத்தி.
இருவரும் ஒரே வீட்டில் வசித்ததாகக் குறிப்பிட்ட காவல்துறை, முதியவரின் மரணம் இயற்கைக்கு மாறானது என வகைப்படுத்தி உள்ளது.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.