புதிய கொவிட்-19 அலை உச்சத்தில் சிங்கப்பூர் உள்ளது: சுகாதார அமைச்சர்

சிங்கப்பூர் தற்போது கொவிட்-19 அலையின் உச்சத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.

கிருமித் தொற்றுச் சம்பவங்கள் இன்று 12,000 எட்டும் என அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய அலை உச்சத்தில் இருப்பதை இது குறிப்பதாக திரு ஓங் கூறினார்.

முன்னைய ஓமிக்ரான் அலையுடன் ஒப்பிடும்போது, தற்போதைய அலையின் பாதிப்பு அவ்வளவு கடுமையாக இருக்காது என அமைச்சர் குறிப்பிட்டார். பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் அல்லது அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொண்டுள்ளது இதற்கு காரணம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 700யை தாண்டியிருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாண்டு தொடக்கத்தில் ஓமிக்ரான் கிருமி பரவியபோது, 1,700க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறினார்.

கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அதை போட்டுக்கொள்ள அரசாங்கள் முயற்சி எடுத்துவருவதாக திரு ஓங் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!