உத்தரப் பிரதேசத்தில் மதிய உணவுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ.11.46 கோடி (சுமார் $2 மில்லியன்) பணத்தைக் கையா டியதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டது.
இதர பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் வங்கி அதிகாரிகளும் அதற்கு உடந்தையாக இருந்து இருக்கிறார்கள் என்று ஊழல் ஒழிப்புத்துறை புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சந்திரகாந்த் சர்மா என்ற அந்த ஆசிரியர் உள்ளூர் அதிகாரிகளுடன் சேர்ந்துகொண்டு 2007ல் 'கல்விச் சங்கம்' என்ற தனியார் அமைப்பை ஏற்படுத்தினார்.
மாணவர்களுக்கு மதிய உணவு விநியோகிக்கும் பொறுப்பு அந்த அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்தச் சங்கத்தின் பொருளாளராக சுனில் சர்மா என்ற பெயரில் அவர் தன்னையே நியமித்துக் கொண்டார்.
சங்கத்தில் உறவினர்கள், குடும்பத்தினரை அவர் நியமித்தார். அந்தச் சங்கம் போலியான கட்டணப் பட்டியல்களைத் தாக்கல் செய்தது. அவற்றின் பேரில் பணம் பெறப்பட்டுள்ளது.
பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணம் போடப்பட்டது. ஃபெரோசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சர்மா ஜெய்ப்பூர் தொடக்கப்பள்ளி என்ற பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருக்கிறார்.
அவருக்கு எதிராக புகார் தாக்கலானதை அடுத்து மாநில அரசு 2017 ஆம் ஆண்டில் விசாரணையைத் தொடங்கியது.
அவர் வங்கிகளில் கடன் பெற்று ஆக்ரா மாவட்டத்தில் பெரும் நிலத்தை வாங்கிக் குவித்தார்.
அந்த ஆசிரியர் மொத்தம் 11.46 கோடி ரூபாயைச் சுருட்டி இருப்பதாக ஆக்ராவில் தாக்கலான புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆசிரியரையும் இதர சில அதிகாரிகளையும் பிரமுகர்களையும் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.