பிரிட்டனை அதிக காலம் ஆட்சி புரிந்த எலிசபெத் அரசியார் காலமானார். அவருக்கு வயது 96. ஸ்காட்லாந்திலுள்ள உள்ள அரண்மனையில் அவர் உயிர் பிரிந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.
தமது தந்தை ஆறாவது ஜார்ஜ் அரசர் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி உயிர் இழந்ததை அடுத்து, எலிசபெத் பிரிட்டிஷ் அரசியாகப் பதவி ஏற்றார். அப்போது அவருக்கு வயது 25. இவ்வாண்டு பிப்ரவரியில் எலிசபெத் அரசியார் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.