சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இருதரப்பு சந்திப்பு நடத்தியுள்ளனர்.
ஜி20 உச்சநிலை சந்திப்பில் பங்கெடுப்பதற்காக, இந்தோனிசியாவின் பாலித் தீவில் நவம்பர் 14ஆம் தேதி திங்கள் அன்று வந்திறங்கினார் சீன அதிபர்.
இரு தலைவர்களின் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கப்படுகிறது. திரு பைடன் அதிபராகப் பொறுப்பேற்றபின்னர் சீன அதிபரைச் சந்திப்பது இதுவே முதன்முறை.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அதிகரித்துவரும் பதற்றநிலைக்கிடையே இந்தச் சந்திப்பு நடக்கிறது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர், தைவான், வடகொரியா, வர்த்தகம் போன்ற விவகாரங்கள் காரணமாக இந்த இரு நாடுகளின் உறவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அவை குறித்து அந்த இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவுடனான அமெரிக்காவின் தொடர்புத் தடங்கள் திறந்தே இருக்கும் என்று அதிபர் பைடன் ஆசியத் தலைவர்களிடம் கம்போடியாவில் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு பாலித் தீவில் வந்திறங்கிய பைடன், சீனாவுடன் கடுமையாகப் போட்டி போடும் என்றும் அந்தப் போட்டி சண்டையில் முடிவடையாத வகையில் இருக்க பார்த்துகொள்ளும் என்றார்.