பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சில பகுதிகளில் கனமான பருவ மழை தொடங்கிவிட்டாலும் நாட் டின் மற்ற பகுதிகளில் வெப்பத் தின் தாக்கம் கடுமையாக இருப்ப தாக மலேசிய வானிலை மையம் தெரிவித்தது. கடும் வெப்பம் காரணமாக மலேசியாவின் சில பகுதிகளில் நேற்றும் பள்ளிகள் மூடப்பட்டதாக வும் அது தெரிவித்தது.
கடந்த வாரம் பருவ மழை தொடங்கியது முதல், மலேசியா வின் மேற்குக் கடலோர மாநிலங் களில் கனமழை பெய்து வருவதாக மலேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாக 'தி ஸ்டார் ஆன்லைன்' இணையத் தளம் தெரிவித்தது. "ஆனால் இந்த மழை சாபா, வடக்கு, மத்திய மலேசியாவின் கடும் வெப்பத்தைத் தணிக்க உதவாது," என்றும் அவர் கூறினார். கோப்புப்படம்: பெரித்தா ஹரியான்