இந்தோனீசியா: ஆஸ்திரேலியா வின் பெர்த்தில் இருந்து புறப்பட்ட ஏர்ஏஷியா QZ535 விமானம் அதில் பயணம் செய்தவர்களின் பெரும்பாலான பயணச்சுமைகளை ஏற்றாமல் பாலியின் டென்பசா ருக்கு சென்று சேர்ந்தது. எடைக் கட்டுப்பாடு காரணமாக அது பயணச்சுமைகளை விட்டுச் சென்றுள்ளது. "விமான ஓடுபாதை மூடப் பட்டதால், விமானத்தை இயக்குவதற்கு சிறிய ஓடுபாதையைப் பயன்படுத்தும் கட்டாயம் ஏற்பட் டது. எனவே, பயணச்சுமைகள் விமானத்தில் இருந்து இறக்கப் பட்டன," என ஏர்ஏஷியா வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது.
"எடை கட்டுப்பாடு காரணமாக, விமானத்தில் ஏற்றப்பட்ட பயணச் சுமைகளில் 104 பயணச்சுமை களை கீழிறக்க நேர்ந்தது," என்று அதில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது பற்றி பயணி களுக்கு முன்கூட்டியே தெரிவிக் கப்படவில்லை என்று கூறப்படு கிறது.