அமெரிக்காவில் வசிக்கும் 16 வயது முகுந்த் வெங்கடகிருஷ்ணன் 4,000 ரூபாயில் காது கேளாதோருக்கான கருவியைத் தயாரித்துள்ளார். கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முகுந்த் கெண்டக்கி மாநிலத்தில் டுபான்ட் மேனுவல் உயர்நிலைப் பள்ளியில் பயில்கிறார். இரண்டு ஆண்டு முயற்சியில் அவர் உருவாக்கியுள்ள இக்கருவியில் தேவைக்கேற்ப ஒலியின் அளவைக் கூட்டி, குறைத்துக்கொள்ளலாம். பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு,
சரிபார்க்கப் பட்டுள்ள இக்கருவியை விலை குறைவான ஹெட்போன்களிலும் பயன்படுத்தலாம். "காது கேளாதோருக்கான கருவியின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரையில் இருக்கிறது. ஆனால் நான் உருவாக்கியுள்ள கருவியை ரூ.4,000க்குத் தயாரிக்க முடியும்" என்ற முகுந்த் பெங்களூருவில் வசிக்கும் தனது தாத்தாவுக்கு இக்கருவியை வழங்க உள்ளார்.