மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பக்கத்து நாடுகளிலும் அதிர்வு

யங்கூன்: மியன்மாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. மியன்மாரின் வடமேற்கு பகுதியை புதன்கிழமை இரவு 6.9 ரிக்டர் அளவு கடும் நிலநடுக்கம் உலுக்கியதாக ஆய்வாளர்கள் கூறினர். பூமிக்கு அடியில் 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் பற்றிய உடனடித் தகவல் எதுவும் வெளிவரவில்லை.

நிலநடுக்கம் பல நிமிடங்கள் வரை நீடித்ததாக மியன்மார்வாசி ஒருவர் கூறியதாக ஏஎஃப்பி தகவல் கூறியது. இந்த நிலநடுக்கத்தால் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தாங்கள் வசிக்கும் நகரில் உயரமான கட்டடங்கள் எதுவும் இல்லாதததால் அதிக பாதிப்பு இல்லை என்றும் மற்றொரு குடியிருப்பாளர் கூறினார். இப்படியொரு நிலநடுக்கத்தை தான் பார்த்ததே இல்லை என்று 67 வயதான ஒரு மாது கூறினார்.

பங்ளாதேஷை உலுக்கிய நில நடுக்கத்தின்போது படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து காலில் பலத்த காயமுற்ற ஓர் இந்திய மாதுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறுகின்றனர். மியன்மாரை 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து இந்தியா, பங்ளாதேஷ் உள்ளிட்ட பக்கத்து நாடுகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!