கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி விவகாரம் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா விடுத்த சவாலை ஏற்பதாகவும் அந்நிறுவனத்தின் தலைவர் அருள் கந்தா தெரிவித்துள்ளார். " புவா விடுத்த சவாலை நான் ஏற்கிறேன். விவாதத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்," என்று அருள் கந்தா நேற்று விடுத்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
"பொதுக் கணக்குக் குழுவின் விசாரணையின்போது இரண்டு நாட்கள் துருவித் துருவி கேள்விகள் கேட்ட பின்னரும் அக்குழுவின் உறுப்பினருமான டோனி புவாவுக்கு திருப்தி இல்லை. இன்னும் சிறிது நேரம் என்னுடன் செலவிட அவர் விரும்புகிறார். அது டோனி புவாவுக்கு மகிழ்ச்சி தருமென்றால் அதை நான் மறுக்க மாட்டேன்," என்று அருள் கந்தா கூறியுள்ளார்.