குவிட்டோ: தென் அமெரிக்காவின் வடக்குக் கடற்கரையோர நாடான இக்வடோரில் நேற்று 7.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த நிலநடுக்கத்தில் பல வீடுகள் இடிந்து நாசமடைந்த நிலையில், குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கடலோரப்பகுதிகளுக்கு பசிஃபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.
தலைநகர் குவிட்டோவில் இருந்து 173 கிலோமீட்டர் வடமேற்கே பூமியின் அடியில் சுமார் இருபது கிலோமீட்டர் ஆழத்தில் முதலில் ஒரு மிதமான நிலநடுக்கமும் அதற்கடுத்த சில நிமிடங் களில் சக்திவாய்ந்த மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிக்டராகவும், இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 7.8 ரிக்டராகவும் பதிவாகி உள்ளது. இவ்விரு நில நடுக்கங்களால் குவிட்டோ நகரில் உள்ள வீடு, கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடு களைவிட்டு ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
பசிஃபிக் கடற்கரையோர நகரான மன்ட்டாவில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்ட இடிபாடுகளை பொதுமக்கள் குழப்பத்துடன் காண்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்