உணவில் கரப்பான் பூச்சி; மலேசியருக்கு S$23,000 இழப்பீடு

கோலாலம்பூர்: சிலாங்கூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மலேசியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் கரப்பான் பூச்சி இருந்ததைத் தொடர்ந்து இழப்பீடு கோரி அந்த மருத்துவமனைக்கு எதிராக அவர் வழக்குத் தொடுத்திருந்தார். வான் ஹலிமி மெஹ்ராவி என்பவர் கடந்த மே மாதம் கேபிஜே சிலாங்கூர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட மதிய நேர காய்கறி உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தாராம். அந்த உணவைச் சாப்பிட்டதைத் தொடர்ந்து வாந்தி, வயிற்று வலியால் தான் அவதிப்பட்டதாக அவர் கூறினார். அவருக்கு அந்த மருத்துவமனை மொத்தம் 67,000 ரிங்கிட்(S$23,000) இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!