வாஷிங்டன்: அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் நான்கு இடங்களில் அடையாளம் தெரியாத சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த எட்டுப் பேரில் 7 பேர் பெரியவர்கள் என்றும் ஒருவர் மட்டும் இளைஞர் என்றும் கூறப்பட்டது. கொல்லப்பட்டவர்கள் அனை வரும் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறினர்.ஈ° கொலைகாரர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குடும்பத் தகராறு இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குடும்ப உறுப்பினர் ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.