கோலாலம்பூர்: மலேசியாவில் புகைமூட்டம் தொடர்ந்து மோச மானால் இங்குள்ள பள்ளிகள் அனைத்தும் ஒரு சில நாட்களுக்கு மூடப்படும் என்று கல்வி அமைச்சர் மஹட்சிர் காலிட் கூறியுள்ளார். காற்றின் தூய்மைக்கேடு அளவு 200 ஐ தாண்டுமானால் பள்ளிகள் மூடப்படும் என்று அவர் சொன் னார். மலேசியாவில் இந்த வாரத் தொடக்கத்தில் புகைமூட்டம் மோசமடைந்ததைத் தொடர்ந்து கல்வி அமைச்சு, நடவடிக்கை செயல்குழுவை அமைத்திருப் பதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.
தேசிய சுற்றுப்புற வள அமைச்சர் வான் ஜூனைடி தலைமையிலான அமைச்சரவைக் குழு புகைமூட்டப் பாதிப்புக் குறித்த தகவல்களை அன்றாடம் தெரி விக்கவிருப்பதாகவும் அமைச்சர் சொன்னார். அத்தகவல் அடிப்படையில் பள்ளிகளை மூடுவது குறித்துத் தாங்கள் முடிவு எடுக்கவிருப்ப தாகவும் அவர் சொன்னார். மலேசியாவில் அனல்காற்று தாக்கி வரும் வேளையில் ஒரு சில இடங்களில் இப்போதே புகை மூட்டப் பாதிப்பு தொடங்கி விட்டது. சிலாங்கூரின் பல பகுதி களிலும் கோலாலம்பூரிலும் புகை மூட்டம் அதிகரித்துள்ளதாக தக வல்கள் கூறின.