சுங்கை பட்டாணி: காது அருகே கைபேசி வெடித்ததால் காயம் அடைந்த 28 வயது ஊழியருக்கு மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை அதி காலை கைபேசியில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மின்னேற்றும் இணைப்புக் கம்பி கைபே சியுடன் இணைக்கப் பட்டிருந்தது. அதோடு அவர் பேசியபோது கைபேசி வெடித்தது. இதனால் அவரது முகத்தின் வலதுபக்கத்திலும் மார்பு, வலது கையிலும் தீக் காயங்கள் ஏற்பட்டன.
சம்பவத்தை உறுதி செய்த மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசான், "கைபேசி வெடித்த தில் அவரது கண் விழிப் படலமும் காது சவ்வும் பாதிக் கப்பட்டுள்ளன," என்றார். மேல் சிகிச்சைக்காக அவரை சிலாங்கூரின் சுங்கை புலோ மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் சொன் னார். இது, மலேசியாவில் மின் னேற்றிக் கொண்டிருந்தபோது கைபேசி வெடித்த இரண் டாவது சம்பவமாகும். கடந்த வாரம் நடைபெற்ற சம்பவத்தில் கைபேசிக்கு மின் னேற்றிக் கொண்டிருந்தபோது இணைப்புக் கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து போலிஸ் காரரின் மனைவி ஒருவர் கொல்லப்பட்டார்.