மணிலா: அபு சாயஃப் பயங்கரவாதிகளை ஒழிப்பேன் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோ சூளுரைத்துள்ளார். தனது சகோதரி கிரிசை கடத்த அவர்கள் திட்டமிட்டனர் என்றும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கனடா நாட்டு பிணையாளியின் தலையைத் துண்டித்த அபு சாயஃப் பயங்கரவாதிகளிடம் 20க்கும் மேற்பட்ட வெளி நாட் டவர்கள் பிணையாளிகளாகச் சிக்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில் சூலுவில் தலையில்லா உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட் டின் ராணுவ அதிகாரிகள் தெரி வித்தனர். ஆனால் எந்த இடத்தில் எப்போது அந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டது என்ற விவரங் களை மேற்கு படைப்பிரிவின் மேஜர் ஃபெலிமோன் டான் வெளி யிடவில்லை. அது, ஓர் ஆணுடைய உடல் என்று மட்டும் அவர் சொன் னார். கனடிய நாட்டவர் ஜான் ரிட்ஸ்டெலின் உடலா என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகக் கூறிய அவர்,
தனது சகோதரியைக் கடத்த அபு சாயஃப் பயங்கரவாதிகள் முயற்சி செய்தனர் என்று திரு அக்கினோ கூறியிருக்கிறார். கோப்புப் படம்