பேங்காக்: கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக நீண்ட வெப்ப அலையை தாய்லாந்து எதிர் நோக்குவதால் பொதுமக்கள் கூடியவரை வீட்டிலேயே இருக்கு மாறும் நிறைய தண்ணீர் அருந்து மாறும் தாய்லாந்து அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த மாதம் தாய்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. நாடு தழுவிய அளவில் வெப்பநிலை எச்சரிக்கை நிலையை தாண்டிவிட்டதாகவும் அனல்காற்று தொடரும் என்றும் தாய்லாந்து வானிலைத் துறை தெரிவித்தது.
இந்த மாதம் பல பகுதிகளில் சராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும் கூடுத லாக வெப்பநிலை 44.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது. வெப்பத்திலிருந்து தப்பிக்க அதிகமானோர் கடற்கரைகள், குளங்கள், ஏரிகளை நாடிச் செல் வதால் சிறுவர்கள் மூழ்கும் அபாய மும் அதிகரித்திருப்பதாக அதி காரிகள் கூறினர். இந்த மாதம் தொடங்கியதி லிருந்து தாய்லாந்தில் 135 சிறு வர்கள் வரை மூழ்கி மாண்டிருப் பதாகப் புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன.