ஈப்போ: பாலர் பள்ளி ஆசிரியரான எம். இந்திரா காந்தி தமது முன் னாள் கணவர் முகமது ரிடுவான் அப்துல்லா வெளிநாட்டுக்குத் தப்பி ஓடுவதைத் தடுத்து நிறுத்து மாறு போலிசைக் கேட்டுக்கொண்டு உள்ளார். இது தொடர்பாக புகார் ஒன்றை நேற்று அவர் ஈப்போ தலைமை போலிஸ் அலுவலகத்தில் சமர்ப் பித்தார். 41 வயதான அவர் தமது வழக்கறிஞர் எம். குலசேகரனுடன் ஈப்போ போலிஸ் நிலையம் சென் றார். மதம் மாறிவிட்ட கே.பத்மநாதன் என்ற ரிடுவான், 8 வயது சிறுமி பிரசன திக்சாவை அவரது தாயா ரான இந்திரா காந்தியிடம் நீதி மன்ற உத்தரவுப்படி ஒப்படைக்கத் தவறியதால் அவரைக் கைது செய் யும்படி தலைமை போலிஸ் அதி காரிக்கு உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு உத்தர விட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து ரிடு வானைத் தேடும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் போலிசிடம் சிக்காமல் அவர் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிடக்கூடும் என்று இந்திரா காந்தி அஞ்சுகிறார். தமது கடைசி மகள் பிரசன திக்சாவை ரிடுவான் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கேட்டு வருகிறார். "என்னுடைய குழந்தை பிரசன திக்சாவை நான் பார்க்க வேண்டும். ஆகக் கடைசியாக 2014ஆம் ஆண்டு அவள் கிளந்தான் தலை நகர் கோத்தா பாருவில் இருப் பதாகக் கேள்விப்பட்டேன். அப் போது எனது முன்னாள் கணவர் ரிடுவான் அங்கு இருந்திருக்கக் கூடும் அல்லது அங்கிருந்து வேறு இடத்திற்கு ஓடியிருக்கக்கூடும்," என்கிறார் இந்திரா காந்தி. "அவர் இன்னும் அதே கைபேசி எண்ணைத்தான் பயன்படுத்தி வருகின்றார். அதில் இருந்துதான் எனக்குத் தொந்தரவு கொடுக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார்.
இளைய மகள் பிரசன திக்சா தம்மிடம் வந்து சேருவாள் என கண்ணீருடன் காத்திருக்கும் இந்திரா காந்தி. படம்: ஊடகம்