கனடாவில் பெரும் காட்டுத் தீ 60,000 மக்கள் வெளியேற்றம்

எட்மாண்டன்: கனடாவின் ஃபோர்ட் மெக்மரே நகரில் மூண்டுள்ள பெரும் காட்டுத் தீயினால் அந்நகரில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களும் வெளி யேறும் நிலை ஏற்பட்டது. மேற்கு மாநிலமான அல்பெர்டா வில் நிகழ்ந்துள்ள இந்தத் திடீர் சம்பவத்தால் கிட்டத்தட்ட 60,000 பேர் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டனர். அரசாங்கம் அவர்களைப் பாது காப்பாக வெளியேற்றியது. 24 மணி நேரத்தில் 10,000 சதுர மைல் பரப்பளவுக்குத் தீ வேகமாகப் பரவியதால் அதிகாரிகள் அதிர்ச்சியில் மூழ்கினர். நிலைமை கையைவிட்டுப்போன தாக அவர்கள் கருதினர். கார்கள் மூலம் நகரை விட்டு வெளியேறியவர்கள் வழியில் ஏற்பட்ட கரும்புகையினால் திக்கு முக்காடிப் போயினர். அவர்கள் சாலைகளைக் கடந்து உயிர் தப்பிக்கப் படும்பாட்டை சமூக ஊடகங்கள் படங்களுடன் விளக் கின.

அல்பெர்டா மாநிலத்தில் இது வரை இதுபோன்றதொரு பெரும் தீச்சம்பவம் நேர்ந்ததில்லை என்று கூறப்படுகிறது. காட்டுத் தீ மளமளவெனப் பரவியதன் காரணமாக சில வீடுகளும், பெட்ரோல் நிலையங்களும் சேதமடைந்தன. சில ஹோட்டல்களுக்கும் தீ பர வியது. இருப்பினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

வேகமாகப் பரவி கட்டுப்பாட்டை மீறிய தீயை அணைக்க கனடாவின் பல பகுதிகளிலிருந்தும் தீயணைப்பாளர்கள் விரைந்து சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!