சரவாக்: ஹெலிகாப்டர் சிதைவுகள், அமைச்சரின் உடல் மீட்பு

கூச்சிங்: சரவாக் மாநிலத்தில் காணாமற்போன ஹெலிகாப்டரின் பாகங்கள் என்று நம்பப்படும் சிதைவுகளை, தேடி மீட்கும் அதி காரிகள் கண்டுபிடித்து உள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்து உள்ளார். ஹெலிகாப்டரின் முழுப் பகுதியையும் கண்டுபிடிக்கும் வரையில் தேடுதல் பணி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மலேசிய தோட்டத் தொழில், மூலப்பொருள் துணை அமைச்சர் நோரியா கஸ்னோன், 52, அவரது கணவர் மற்றும் நால்வர் அந்த ஹெலிகாப்டரில் சென்றனர். யூரோகாப்டர் AS350 என்னும் அந்த ஹெலிகாப்டர் பெத்தோங் கிலிருந்து மாலை 4.12 மணிக்கு கூச்சிங் நோக்கிக் கிளம்பிச் சென்றது.

கூச்சிங் சென்றுசேர 35 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால் திடீரென்று மாலை 4.32 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் ராடார் தொடர்பி லிருந்து விடுபட்டதாகத் தெரி விக்கப்பட்டது. உதவி கேட்டு ஹெலிகாப்டரிலிருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை என்று சரவாக் போலிஸ் ஆணையர் முகமது சப்து ஒஸ்மான் நேற்று முன்தினம் இரவு தெரிவித்தார். இதற்கிடையே, பத்தாங் லுபார் என்னும் இடத்தில் ஹெலிகாப்டர் வாலின் ஒரு பகுதியும் மிதவைக் கருவியின் பாகம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!