இந்தோனீசியாவின் ஆட்சேபம் வரவில்லை

கடந்த ஆண்டு கடுமையான புகைமூட்டத்தை ஏற்படுத்திய காட்டுத்தீ சம்பவங்களில் தொடர் புடையதாக நம்பப்படும் இந்தோ னீசியத் தொழிலதிபர்மீது நட வடிக்கை எடுக்கும் சிங்கப்பூர் அர சாங்கத்தின் முயற்சிக்கு தனது அதிகாரபூர்வ ஆட்சேபணையைத் தெரிவித்து விட்டதாக இந்தோனீ சியா கூறியிருக்கிறது. சிங்கப்பூர் சுற்றுப்புற அமைச்சரி டம் இந்தோனீசியத் தூதர் ஆட் சேபணையைத் தெரிவித்திருப் பதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அர்மனாதா நசிர் 'ஜக்கார்த்தா போஸ்ட்'டிடம் கூறினார்.

அப்படிப்பட்ட எந்த ஒரு ஆட்சேபணைக் கடிதமும் கிடைக் கப்பெறவில்லை என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது. இந்நிலையில், எல்லைதாண்டிய புகைமூட்டச் சட்டத்தின்கீழ் எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் தொடர் பாக இந்தோனீசியா இம்மாதம் 6ஆம் தேதி அனுப்பியதாகச் சொல்லப்படும் ஆட்சேபணை எது வும் வந்து சேரவில்லை என்று நேற்று சிங்கப்பூரின் சுற்றுப்புற, நீர்வள அமைச்சும் தெரிவித்தது. மேலும், இம்மாதத் தொடக் கத்தில் எல்லைதாண்டிய புகை மூட்ட மாசு தொடர்பிலான 18ஆவது துணை வட்டார அமைச்சர்நிலை வழிகாட்டிக் குழு கூட்டத்தில் பங்கேற்க சிங்கப்பூர் வந்திருந்த இந்தோனீசிய அதிகாரிகள் கூட இவ்விவகாரம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும் அமைச் சின் பேச்சாளர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!