இலங்கையில் நிலச்சரிவு; இன்னும் 100 பேரைக காணவில்லை

கொழும்பு: இலங்கையில் சென்ற வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் இன்னும் 100 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்ணில் புதையுண்ட பலர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 67 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக பேரிடர் நிவாரண நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இலங்கையின் பல பகுதியில் சென்ற வாரம் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் இலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளைவிட்டு வெளியேறிய 600,000 பேரில் பெரும்பாலோர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இலங்கை அரசாங்கம் அனைத்துலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!