மலேசியாவில் 15 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நீக்கம்

செபாங்: மலேசிய குடிநுழைவு முறையை அமல்படுத்துவதில் முறைகேடாக நடந்துகொண்ட 15 அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் என்று மலேசிய குடிநுழைவுத் துறை நேற்றுத் தெரிவித்தது. குடிநுழைவு இயக்குநர் ஜெனரல் சாகிப் குஸ்மி, வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் ஆறு மாதங்கள் முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றி யவர்கள் என்று குறிப்பிட்டார். மேலும் 14 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்றும் எட்டு அதிகாரிகளின் சம்பளம் முடக்கி வைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

"புத்ரஜெயா தலைமையகத்திலிருந்து 63 அதிகாரிகளை வேறு இடத்துக்கு மாற்றும் கடுமையான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். விமான நிலையத்தில் பணியாற்று வதற்கு புதிய பெயர்கள் அடங் கிய பட்டியலைத் தயாரித்து வரு கிறோம்," என்று திரு சாகிப் குஸ்மி தெரிவித்தார். குடிநுழைவு முறையில் நாச வேலையில் ஈடுபட்டதாக நம்பப் படும் மேலும் 20 அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் வைக்கப் பட்டுள்ளனர். 'myIMMs' என்ற குடிநுழைவு முறையில் நாச வேலை செய்த தாக நம்பப்படும் கும்பல் உறுப் பினர்கள், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் உட்பட 100 பேர் விசாரிக்கப்படுவதாக துணைப் பிரதமர் டாக்டர் அகமட் சாஹித் ஹமிடி கடந்த வாரம் கூறியிருந் தார். அதனைத் தொடர்ந்து பணிநீக்க, வேலை நீக்க நட வடிக்கை இடம்பெற்றுள்ளது.

மலேசிய காவல்துறை தலைமை இயக்குநர் சாகிப் குஸ்மி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!