பாரிஸ்: பிரான்சில் போக்குவரத்து நெருக்கடி மீண்டும் ஏற்பட்டு உள்ளது. இம்முறை ரயில் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய கிண்ண காற் பந்துப் போட்டி தொடங்க இன்னும் ஒருசில நாட்கள் இருக்கையில், போக்குவரத்துத் துறையை உலுக்கி வரும் வேலை நிறுத்தப் போராட்டங்களால் பிரஞ்சு அரசாங்கம் நெருக்கு தலுக்கு ஆளாகியுள்ளது.
இந்த ஆக அண்மையப் போராட்டம், எஸ்என்சிஎஃப் போக்குவரத்து நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த மூன்று மாதங்களில் நடத்தும் எட்டாவது வேலை நிறுத்தப் போராட்டமாகும். கூடுதல் சம்பளம், மேம்படுத் தப்பட்ட வேலையிடச் சூழல் ஆகியவற்றை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காவிடில் போராட்டம் தொடரும் என்று ரயில் சேவை ஊழியர்கள் போர் முரசு கொட்டியுள்ளனர்.