பிரான்ஸ், ஜெர்மனியில் வெள்ளப்பெருக்கு: 5 பேர் மரணம்

பெர்லின்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளின் பல பகுதிகளில் பெய்த கன மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மக்கள் தவிக்க நேர்ந்துள்ளது. சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ள நிலையில் வீட்டுக் கூரைகளில் தஞ்சம் அடைந்த ஏராளமானோர் உதவிக்காக காத்திருப்பதாக தகவல்கள் கூறு கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட் டுள்ளன. ஜெர்மனியில் ஒரு வீட்டுக்குள் சிக்கியிருந்த மூவர் அங்கு இறந்து கிடந்ததாகவும் மற்றொரு மூதாட்டியின் சடலம் அவரது வீட்டுக்குள் புகுந்த வெள்ளத்தில் மிதந்து காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்சில் பாரிஸ் நகரம் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை கருத்தில்கொண்டு பாரிசில் குறிப்பிட்ட சில இடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!