சிட்னி: சிட்னி உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நேற்று மணிக்கு 125 கி.மீ. வரையிலான பலத்த புயல்காற்று வீசியதில் பல மரங்கள் வேருடன் சாய்ந்தன. கடந்த 30 ஆண்டுகளில் இல் லாத அளவுக்கு கிழக்குக் கடற் கரைப் பகுதியில் புயலின் தாக் கம் இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரி வித்தனர்.
நேற்று முன்தினம் குவீன்ஸ்லாந்தைப் புரட்டிப் போட்ட புயல் நேற்று நியூ சவுத் வேல்சைத் தாக்கியது. கடல் கொந்தளிப்பால் ராட்சத அலை கள் தோன்றின. சில அலைகள் 13 அடிவரை எழுந்தன. சிட்னி விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டன. நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் நூற்றுக் கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பரமாட்டா ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் படகுத்துறை ஒன்று மூழ்கியது. மழைநீரால் ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. படம்: இபிஏ