தொழிற்சங்கங்களுக்கு பிரெஞ்சு அதிபர் எச்சரிக்கை

பாரிஸ்: பிரான்சில் யூரோ 2016 காற்பந்துப் போட்டி தொடங்கியுள்ள வேளையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட வேண்டாம் என்று பிரெஞ்சு அதிபர் ஹொலாண்ட் எச்சரித்துள்ளார். தொழிலாளர் சட்டத்தில் அரசாங்கம் செய்துள்ள சீர்திருத்த மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் பிரான்சில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ரயில்வே ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுமாறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் பாரிஸ் நகரில் துப்புரவுப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பல இடங்களில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. பாரிசில் காற்பந்து ரசிகர்கள் திரண்டிருக்கும் வேளையில் குப்பைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்படும் என்று அதிபர் அறிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!