நியூயார்க்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லண்டோ நகரில் ஓர் இரவு விடுதியில் ஒருவன் கண்மூடித் தனமாக சுட்டதில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாகவும் குறைந்தது 42 பேர் காயம் அடைந்ததாகவும் ஆர்லண்டோ போலிஸ் படைத் தலைவர் ஜான் மினா கூறினார். அந்தத் துப்பாக்கிக்காரனை போலிசார் சுட்டுக் கொன்றதாக வும் அவர் சொன்னார். இந்த/g சம்பவம் பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் புலன்விசாரணை நடந்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்று கூடும் இரவு விடுதி அது. நேற்று அதிகாலை பல்ஸ் எனப்படும் இரவு விடுதிக்குள் நுழைந்து பலரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிக்காரனை ஆர்லண்டோ போலிசார் பின்னர் சுட்டுக் கொன்றனர். அவன் கைத்துப்பாக்கியும் வேறு சில ஆபத்தான கருவிகளும் வைத்திருந்ததாகவும் போலிசார் கூறினர்.