பௌத்த மடாதிபதிக்கு இறுதி எச்சரிக்கை

பேங்காக்: தாய்லாந்தின் சக்திவாய்ந்த பௌத்த ஆலயத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், சரண் அடை அல் லது கைது செய்ய வேண்டியிருக்கும் என்று அதன் மடாதிபதியை எச் சரித்தனர். 72 வயது மடாதிபதி ஃபிரா தம்மசாயோவைக் கைது செய்ய வாட் ஃபிரா தம்மகயா ஆலயத் துக்கு அதிகாரிகள் கைது ஆணையுடன் வந்தனர். ஆனால் அவருக்கு ஆதரவாக ஏராளமான ஆதரவாளர்கள் அங்கு கூடினர். "ஏற்கெனவே அவருக்கு எதி ராகக் கைது ஆணைப் பிறப்பிக்கப் பட்டது. அந்த ஆணையை நிறை வேற்ற அதிகாரிகள் ஆலயத்தில் நுழைந்து அவரைக் கைது செய்ய முயற்சி செய்தனர்," என்று சிறப்பு புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் லெப்டினெண்ட் கர்னல் சம்பூன் சரசிட் சொன்னார்.

ஃபிரா தம்மசாயோவைக் கைது செய்யும் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் நேற்று அதிரடி நட வடிக்கையில் இறங்கினர். கூட்டுறவு சங்கத்திலிருந்து திருடப்பட்ட பணத்தைப் பெற்று நல்ல பணமாக மாற்றும் மோசடியில் மடாதிபதி ஈடுபட்டதாகக் கூறப்படு கிறது. கடந்த மார்ச் மாதம் அதே குளோங்சான் கூட்டுறவு சங்கத் தில் சுமார் 11 பில்லியன் பாட் (425 மில்லியன் வெள்ளி) கையாடப்பட்ட விவகாரத்தில் சுபாசாய் சிறிசுபா- அக்சோன் என்பவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பேங்காக்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மடாதிபதி ஃபிரா தம்மசாயோ. நேற்றுக் காலை விசாரணை அதிகாரிகளின் வேனில் அவர் ஏறிச்சென்றதாகக் கூறப்படுகிறது. கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!