ஹாங்காங்: ஹாங்காங்கில் குடியுரிமை எதுவும் பெற்றிராத குழந்தைகளின் பிறப்பு விகிதமும் குடியுரிமை வேண்டும் அகதிகளின் கோரிக்கைகளும் கடந்த இரண்டாண்டுகளில் மும்மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங்கில் தங்குவதற்கு அனுமதி வேண்டி 2009 முதல் இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட 8,000 விண்ணப்பங்களில் 52ஐ மட்டுமே ஹாங்காங் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
15 வருடங்களுக்கு மேலாக சுமார் 11,000 அகதிகள் குடியுரிமை இல்லாமல் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். மேலும், இந்த அகதிகளின் பிள்ளைகளும் நாடற்ற நிலையில் தொடர்ந்து வாழ்வதால் கல்வியின்மை, வேலையின்மை போன்ற பல சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.