ஜார்ஜ் டவுன்: நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மீது பினாங்கு உயர்நீதிமன்றத்தில் 2 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சந்தை விலைக்குக் குறைவாக வீடு வாங்கியது, பதவியைப் பயன்படுத்தி நில விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியது போன்றவையே அந்தக் குற்றச்சாட்டுகள். ஜனநாயக செயல் கட்சியின் பொதுச்செயலாளரான திரு லிம், நேற்று வர்த்தகரான குமாரி பாங் லி கூன் என்பவருடன் மலேசியாவின் ஊழல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.
திரு லிம்முக்கு எதிரான அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை மலேசிய தலைமைச் சட்ட அதிகாரி அபாண்டி அலி நேற்று காலை பினாங்கு உயர்நீதிமன்றத்தில் விளக்கினார். பினாங்கு அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு அரசாங்க வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதையடுத்து உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட் டது. திரு லிம் மீது ஊழலுக்கு எதிரான சட்டப் பிரிவு 23ன் கீழ் குற்றம் சாட்டப்படும். பிரிவு 23ன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுச் சிறைத் தண்டனையும் அபராதமாக ஊழலாக பெற்ற தொகையை 5 மடங்காக திருப்பிச் செலுத்த வேண்டும். குமாரி பாங் திரு லிம்மின் பின்யார்ன் ரோட்டிலுள்ள வீட்டின் முன்னாள் உரிமையாளர். அந்த வீட்டை பின்னர் 2.8 மில்லியன் ரிங்கிட்டுக்கு திரு லிம் வாங்கிய தாகக் கூறப்படுகிறது.
இரண்டு குற்றச்சாட்டுகளையும் திரு லிம் மறுத்துள்ளார். நீதி மன்றம் திரு லிம்முக்கு 1மில்லியன் ரிங்கிட் பிணை வழங்கியுள்ளது. பிணை பெற்ற திரு லிம் வெளி நாடுகளுக்குச் செல்வதாக இருந்தால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே உயர் நீதிமன்றத்திற்கு அது பற்றி தெரிவிக்க வேண்டும். 55 வயதாகும் திரு லிம் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநிலத்தின் முதலமைச் சராகப் பதவி வகிக்கிறார். கைது செய்யப்பட்டதற்குப் பின்னர் முதன்முதலாக நேற்று மதியம் திரு லிம் செய்தியாளர் களைச் சந்தித்துப் பேசினார். இந்த வழக்கில் கடைசி வரை போராடி வெற்றி பெறுவேன் என்று தனது ஆதரவாளர்களிடம் உறுதி தெரிவித்தார்.
"மண்டியிட்டு வாழ்வதைக் காட்டிலும், நெஞ்சை நிமிர்த்தி சாவதே மேல்," என்று அங்கிருந்த கூட்டத்தினரிடமும் கட்சித் தலை வர்களிடம் பேசினார். "நான் பதவியில் இருப்பது பற்றி ஜனநாயகக் கட்சிக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதுவரையிலும் முதல்வராக எனது பணியைத் தொடர்வேன்," என்று செய்தியாளர் கேட்ட ஒரு கேள்விக்குப் பதி லளிக்கையில் இவ்வாறு கூறியுள் ளார். இந்நிலையில் அம்னோ கட்சி யினர் திரு லிம் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரி வருகின்றனர்.