லண்டன்: ஈராக் மீது தொடுக்கப்பட்ட போரில் சேர்ந்துகொள்ள பிரிட்டன் எடுத்த முடிவு சட்ட விரோதமானது என்று முன்னாள் பிரிட்டிஷ் துணைப் பிரதமர் ஜான் பிரஸ்காட் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலைமையில் 2003-ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் மீது போர் தொடுக்க உடன்பட்ட அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரின் முடிவு சட்டவிரோதமானது என்று ஜான் பிரெஸ்காட் தெரிவித்துள்ளார். ஈராக் போர் சட்ட விரோதமானது என்று முன்னாள் ஐநா தலைமைச் செயலாளர் கோஃபி அன்னான் கூறியது சரியே என்று தான் இப்போது நம்புவதாகவும் பிரஸ்காட் கூறினார். ஈராக் போரில் பிரிட்டன் ஈடுபட்டது குறித்து ஆராய அமைக்கப்பட்ட விசாரணைக் குழு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கை, ஈராக்கிய அதிபர் சதாம் ஹூசேனால் அப்போது ஆபத்து இல்லை என்று தெரிந்திருந்தும் அமைதி வழிகள் பல இருந்தும் அமெரிக்காவுக்கு துணை யாக பிரிட்டன் ஈராக் போரில் சேர்ந்தது தவறான முடிவு என்று கூறியது.
‘ஈராக் போர் சட்ட விரோதமானது’
11 Jul 2016 09:15 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jul 2016 08:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!