மணிலா: செபுவைச் சேர்ந்த வர்த்தகர் பீட்டர் லிம்மை போலிஸ் விசாரணைக்கு உட்பட்டு தாம் 'மாபெரும் போதைப்பொருள் கடத்தல்காரனான பீட்டர் லிம் இல்லை' என்று நிரூபிக்குமாறு பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட் கூறியுள்ளார். சென்ற வெள்ளிக்கிழமை டாவோ நகரில் அதிபர் டுடெர்ட், லிம்மைச் சந்தித்தபோது தாம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்திலில் ஈடுபடவில்லை என்றும் நாட்டில் போதைப்பொருளுக்கு எதிராக நடத்தப்படும் நடவடிக்கைகளில் தாம் உதவப்போவதாகவும் லிம் கூறினார். அதற்கு அதிபர் டூட்ரெட், "மன்னிக்கவும். என்னால் உங்களைக் காப்பாற்ற இயலாது," என்று கூறினார்.
சீன நாட்டவரான வு டுவான் என்றழைக்கப்படும் பீட்டர் கோ, ஜாகுவார் என அழைக்கப்படும் பீட்டர் லிம், லுஸே„ன் ஆகிய மூவரும் பிலிப்பீன்சில் சட்ட விரோதமாக போதைப்பொரு ளைக் கையாளுவதாக அதிபர் முன்பு குறிப்பிட்டிருந்தார். அவர்களில் கோ தற்போது முடின்லுபா நகரில் உள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான். ஜாகுவாரின் அடை யாளம் இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை.
பீட்டர் லிம்முடன் உரையாடும் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட் (வலது). படம்: ஏஎஃப்பி