ஆப்கான் அதிபர்: தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்கு தலில் கொல்லப்பட்டவர்களுக்கு அந்நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று துக்க தினம் அனுசரிக்கப்பட்ட வேளையில் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி சூளுரைத்தார். ஆப்கான் தலைநகர் காபூலில் ஹஸாரா சிறுபான்மை இனத்தவர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அங்கு குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 80 பேர் கொல்லப் பட்டனர்.

200-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். போராட்டம் நடத்திய ஹஸாரா சிறுபான்மை இனத்தவரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதக் குழு பொறுப் பேற்றுக்கொண்டுள்ளது. அங்குள்ள ஐநா தூதரகமும் நேட்டோ படையினரும் அந்தத் தாக்குதலை கண்டித்துள்ளன.

காபூல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் காலணிகளும் உடைமைகளும் காணப்படும் இடத்தில் உறவினர் ஒருவர் கதறி அழுகிறார். ஏராளமானோர் அந்த இடத்தில் கூடியுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!