ஈப்போ: பேராக் சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக எஸ். தங்கேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்தப்பொறுப்பில் இருந்துவந்த எஸ். கே. தேவமணி பதவி விலகி யதைத் தொடர்ந்து புதிய நியமனம் இடம்பெறுகிறது. இதன் மூலம் பேராக் மாநிலத் தின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை தங்கேஸ்வரி பெறுகிறார். மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசிய மகளிர் அணி முன்னாள் துணைத் தலைவரும் பேராக் மாநில மலேசிய இந்தியர் காங்கிர சின் முன்னாள் தலைவருமான தங்கேஸ்வரி, சபாநாயகருக்கான வாக்கெடுப்பில் 30 வாக்குகளைப் பெற்றார்.
இவரை எதிர்த்துப் போட்டி யிட்ட 'பத்து காஜா' தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் 24 வாக்குகள் பெற்றார். நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. திரு தேவமணி பிரதமர் துறையின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதால் பேராக் சட்ட மன்ற சபாநாயகர் பொறுப்பி லிருந்து விலகினார்.