புத்ராஜெயா: மற்ற நாடுகளுடன் மலேசியா கொண்டுள்ள உறவு, வர்த்தக அதிகரிப்பு இவற்றின் அடிப்படையிலேயே பொருளியல் மாற்றம் ஏற்படும் என்றும் வெளியுறவுக் கொள்கையை உறுதிப்படுத்த முடியும் என்றும் தாம் நம்புவதாக மலேசியப் பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் ஒரு மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய திரு நஜிப், மலேசியாவின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது நாட்டின் ஒத்துழைப்பே தவிர கருத்து வேறுபாடு அல்ல என்று கூறினார். மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும் பங்காளித்துவத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்றும் திரு நஜிப் கூறினார்.