வாஷிங்டன்: அமெரிக்கத் தேர்தல் நெருங்கும் வேளையில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப், தனக்கு வாக்களிக்குமாறு கறுப்பின மக்களிடம் நேரிடை யாகவே வேண்டுகோள் விடுத் துள்ளார். மிச்சிகனில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், கறுப்பின மக்கள் வறுமை நிலையில் வசிப்பதாகவும் அவர் களின் பள்ளிக்கூடங்கள் வசதி யாக இல்லை என்றும் கூறினார். இனி நீங்கள் இழப்பதற்கு என்ன இருக்கிறது? என்று கூறிய டிரம்ப், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஜனநாயகக் கட்சியினர் செய்யத் தவறிய சிறந்தவற்றை தான் செய்வேன் என்று உறுதியளித்தார்.
அதே மக்களுக்கு நீங்கள் தொடர்ந்து வாக்களித்துக் கொண்டே இருந்தால் ஒரே மாதிரியான விளைவையே நீங்கள் பெறுவீர்கள் என்றும் டிரம்ப் கூறினார். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹில்லரி கிளின்டனைப் பற்றியும் டிரம்ப் குறை கூறினார். வேலை இல்லாத கறுப்பின இளைஞருக்கு ஒரு வேலை கொடுப்பதற்குப் பதிலாக ஒரு அகதிக்கு ஹில்லரி வேலை கொடுப்பார் என்று டிரம்ப் கூறினார். அறியாமல் கூறிய டிரம்பின் கருத்து தன்னை மலைக்க வைக்கிறது என்று ஹில்லரி குறிப்பிட்டுள்ளார். 2020ஆம் ஆண்டு நடக்க வுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் இரண்டாம் தவணைக் காலத்திற்கு போட்டி யிட்டால் 95 விழுக்காடு ஆப்பிரிக்க=அமெரிக்கர்களின் வாக்கு தனக்கு கிடைக்கும் என்றும் டிரம்ப் முன்னுரைத்தார். அமெரிக்க வரலாற்றிலேயே ஆக அதிகமாக அதிபர் ஒபாமாவுக்கு 2012ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கறுப்பின மக்களின் 93 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.