ஹாங்காங்: ஹாங்காங் சட்டமன்றத் திற்கான தேர்தலில் சீன எதிர்ப்பு புதிய தலைமுறை மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளதை முதற்கட்ட தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதில் ஒருவர் நேதன் லாவ் என்பவர். இவர் 2014ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற ஜன நாயக ஆதரவு போராட்டங்களில் கலந்துகொண்டவர். இவரைப் போன்ற இளம் தலை வர்கள் பலருக்குக் கிடைத்துள்ள தேர்தல் வெற்றி அரசியலில் தங்கள் அதிகாரத்தைப் பயன் படுத்த இவர்களுக்கு கிடைத் திருக்கும் வாய்ப்பாகக் கருதப்படு கிறது.
எனினும், ஹாங்காங்கின் தேர்தல் முறைப்படி, சீன ஆதரவு அரசியல்வாதிகளே மன்றத்தில் அதிக எண்ணிக்கையில் ஆதிக் கம் செலுத்த முடியும். ஹாங்காங்கில் நேற்று முன் தினம் தேர்தல் நடைபெற்றது. அதில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 3.8 மில்லியன் பேரில் கிட்டத்தட்ட 58 விழுக்காட்டினர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 45.2 விழுக் காட்டினர் வாக்களித்தனர். ஹாங்காங்கில் கடந்த 2014ஆம் ஆண்டு இளம் ஆர்ப்பாட்டக்காரர் கள் தீவின் பல பகுதிகளைத் தங் களுடைய போராட்டத்தால் ஸ்தம் பிக்க வைத்தபின் நடக்கும் முதல் தேர்தல் இது.
அங்குள்ள அரசியலில் சீனா வின் தலையீடு அதிகமாக இருப்ப தைக் கண்டித்தும் தங்களுக்குக் கூடுதல் ஜனநாயக உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை ஏற்க மறுத்த சீன அரசாங்கம் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு எவ்வித சலுகையையும் அளிக்க முன் வர வில்லை. "ஹாங்காங் மக்கள் உண்மை யாகவே மாறுதலை விரும்பு கின்றனர். ஹாங்காங் இளையர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து தீவிர மாக சிந்திக்க ஆரம்பித்து விட் டனர்," என்று ஆர்ப்பாட்டத் தலை வர்களில் ஒருவரான நேதன் லாவ் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது. இவர் ஹாங்காங் மக்களுக்கு சுய அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள டெமோசிஸ்டோ கட்சியைச் சேர்ந் தவர்.
சீனாவுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவரான நேதன் லாவ் தேர்தலில் வெற்றி பெற்றதை நண்பர்களுடன் கொண் டாடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்