பத்து பகாட்: ரம்புத்தான் பழங்களைப் பறிக்க தாத்தாவுடன் சென்ற இரண்டு வயதுச் சிறுவன் அருகில் இருந்த கழிவுநீர்க் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த புதன்கிழமை பிற்பகலில் 67 வயதான தாத்தா, ஆதம் அமின் ஜெஃப்ரி எனும் அச்சிறுவனை வீட்டிலிருந்து 60 மீட்டர் தூரத்தில் இருக்கும் ரம்புத்தான் மரத்தில் பழம் பறிக்க அழைத்துச் சென்றார். பழம் பறித்த பிறகு பேரனை உடன் அழைத்துச் சென்றதை மறந்த தாத்தா, வீட்டுக்குத் திரும்பி உறங்கச் சென்றுவிட்டார். சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சிறுவனின் சடலம் கழிவுநீரில் மிதந்ததை அக்கம்பக்கத்தார் கண்டுபிடித்தனர். சிறுவன் இறந்து போனது மருத்துவமனையில் உறுதிசெய்யப்பட்டது. பிறந்தது முதல் தாத்தாவுடன் வசித்து வந்த அச்சிறுவனின் பெற்றோர் ஷா அலாமில் பணிபுரிந்து வந்தனர். சிறுவனின் தம்பி பெற்றோருடன் வசித்து வருகிறான்.
முதியவரின் மறதியால் 2 வயதுச் சிறுவன் கழிவுநீரில் மூழ்கி மரணம்
10 Sep 2016 08:20 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Sep 2016 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!