பெய்ஜிங்: உலகின் மிக உயரமான மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவுறும் நிலையில் இருக்கிறது என்று சீனாவின் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். தென்மேற்கு மலை களுக்கு இடையே ஆற்றுக்கு மேலே 565 மீட்டர் உயரத்தில் பெய்பான்ஜியாங் (படம்) என்ற அந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது என்று குய்ஷோவ் மாகாண போக்குவரத்துத் துறை அறிக்கை தெரிவித்தது. ளpட்சனிக்கிழமை அன்று மேம்பாலத்தின் இரு முனைகளும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டன.
ஹுபேயில் தற்போதுள்ள மிக உயரமான ஸி டு ஆற்று மேம் பாலத்தை இது மிஞ்சி விடும் என்றும் அறிக்கைக் குறிப்பிட்டது.
சீனாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான மேம்பாலம் மலைகளுக்கு இடையே இரண்டு மாகாணங்களை இணைக்கிறது. இது, இவ்வாண்டு இறுதியில் திறக்கப்படவிருக்கிறது. படம்: ராய்ட்டர்ஸ்