பெய்ரூட்: சிரியாவின் கிழக்குப் பகுதியில் சிரியாவின் போர் விமானம் ஒன்றை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ஐஎஸ் அமைப்பின் செய்தி நிறுவனமான அமாக் தனது இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. சிரியாவின் பிரச்சினைகளை ஆறு ஆண்டுகளாகக் கண் காணித்து வரும் மனித உரிமை கண்காணிப்புக் குழு, அந்த போர் விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. சுடப்பட்ட விமானம் ஜெபெல் தர்டா பகுதியில் விழுந்ததாக சிரிய அரசாங்கத்தின் ராணுவ விமானத் தளத்தைப் பார்வையிட்டு வரும் அந்தக் கண்காணிப்புக் குழு குறிப்பிட் டுள்ளது. நேற்று முன்தினம் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நடத்திய ஆகாயத் தாக்குதலில் பல சிரிய படைவீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது ஜெபர் தார்டா பகுதியில்தான் என்பது குறிப் பிடத்தக்கது. அமெரிக்காவின் அந்தத் தாக்குதல் காரணமாக அமெரிக்கா, ரஷ்யா இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் அவசரக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு ஐநா பாதுகாப்பு மன்றத்தை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
ஐஎஸ் அமைப்பின் தளம் என்று சந்தேகப்பட்ட இடத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நேற்று முன்தினம் ஆகாயத் தாக்குதல் நடத்தியது. ஆனால், அந்தத் தாக்குதல் சிரிய ராணுவ வீரர்கள் மீதானது எனவும் அதில் 60க்கும் அதிக மான சிரிய வீரர்கள் இறந்துபோனது பற்றியும் அமெரிக்காவுக்கு ரஷ்யா தெரிவித்தது. அதனை அடுத்து கூட்டுப் படையினர் தாக்குதலை நிறுத் தினர். இருப்பினும், அமெரிக்கா வின் மீது ரஷ்யா கடும் கோபம் கொண்டது. "மிகவும் பயங்கரமான உண்மை ஒன்றை உலகுக்கு தெரிவிக்கிறோம். ஐஎஸ் அமைப்பை அமெரிக்கா தற்காக்கிறது. இப்போது அது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது," என ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா ஸக்காரோவா குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின.