யாஹூவில் ஊடுருவல்: 500 மில்லியன் பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு

நியூயார்க்: யாஹூவைப் பயன் படுத்துகின்ற 500 மில்லியன் பேரின் தகவல்கள் திருடப் பட்டுள்ளன. கணினி ஊடுருவல் பேர்வழிகள் அத்தகவல்களை திருடிச் சென்றதாக யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது. யாஹூ பயனீட்டாளர்களின் பெயர்கள், முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், கைத் தொலைபேசி எண்கள், பிறந்த தேதிகள் மற்றும் கடவுச் சொல் உள்ளிட்ட அனைத்துத் தனிப் பட்ட தகவல்களும் களவாடப் பட்டுள்ளன. எனினும் கடன் பற்று அட்டை விபரங்கள் களவாடப்படவில்லை என யாஹூ அறிவித்திருக்கிறது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்களின் கடவுச் சொல்லை மாற்றாமல் வைத்திருப்பவர்கள், அதனை மாற்றிக் கொள்வது நல்லது என்று யாஹூ பயனீட் டாளர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இது தனிப்பட்ட நோக்கத்தை கொண்ட களவாடல் அல்ல என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாஹூ ஊடுருல் குறித்து அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை செய்து வருகிறது. இப்படியொரு ஊடுருவல் நடந்திருக்கிறது என்ற விஷயமே, கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் அம்பலத்திற்கு வந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!