பாலம் சரிந்ததில் மூவர் பலி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் ஒரு பாலம் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்ததாகவும் நால்வர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது அந்தப் பாலம் சரிந்து விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இதனால் பாலத்திற்கு அடியில் நடந்து சென்றவர்கள் காயம் அடைந்ததுடன் அந்தப் பாலத்தை பயன்படுத்தியவர்களும் கீழே சாலையில் விழ நேரிட்டது என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். பாலத்தின் ஒரு பகுதியே இடிந்து விழுந்தது என்று கூறிய அந்த இடத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்தப் பாலம் இரும்புச் சட்டங்களால் செய்யப்பட்டவை என்பதையும் அவை துருப்பிடித் திருப்பதையும் ஒப்புக்கொண்டார்.

கனமழை காரணமாக அப்பாலம் இடிந்து விழுந்ததாகக் கூற முடியாது என்று வாகன ஓட்டுநர் ஒருவர் கூறினார்.

ஜகார்த்தா தென் பகுதியில் உள்ள ஒரு பாலம் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து தீயணைப்பாளர்களும் மீட்புக் குழுவினரும் அவ்விடத்திற்கு விரைந்து சென்றனர். இந்தப் பாலம் ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் அந்த ரயில் நிலையத்திற்குச் செல்ல பலர் இந்தப் பாலத்தை பயன்படுத்தி வந்தனர். படம்: ஜகார்த்தா போலிஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!