பாகிஸ்தானை உலுக்கிய 5.5 ரிக்டர் நிலநடுக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெஷாவர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஸ்வாட் பள்ளத்தாக்கின் மிங்கோரா நகரின் கிழக்கே 117 கி.மீ. தொலைவில் 43.4 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் நில அதிர்வை உணர்ந்த மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்த தாக அதிகாரிகள் கூறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இதே போல் இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதி யிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவாகியிருந்ததாக தெரி விக்கப்பட்டது.

இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத்தில் இருந்து 62 கி.மீ. தொலைவில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. பாகிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் மக்கள் அச்சம் அடைவதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!